Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம்: சவரனுக்கு ரூ.336 உயர்வு

செப்டம்பர் 16, 2019 06:25

சென்னை: சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கத்தின் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக உயர்ந்தது.

2 வார இடைவெளியில் பவுனுக்கு ரூ.2ஆயிரத்திற்கு மேல் உயர்ந்தது. தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த 4-ந்தேதி இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது.

கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,498 வரை குறைந்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3584-க்கும், ஒரு பவுன் ரூ.28,672-க்கும் விற்பனை ஆனது.

கடுமையாக உயர்ந்த தங்கத்தின் விலை ஓரளவு குறைந்தது பெண்கள் இடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,626-க்கு விற்பனை ஆனது.இதனால் ஒரு பவுனுக்கு ரூ.336 உயர்ந்து மீண்டும் ஒரு பவுன் விலை ரூ.29,008க்கு விற்பனையாகிறது.

தலைப்புச்செய்திகள்